அரியலூர்
ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை பயிற்சி
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தா. பழூரில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்த ஒரு நாள் பயிற்சி
அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே தா. பழூரில் ஊராட்சி செயலாளர்களுக்கு பணமில்லா பரிவர்த்தனை குறித்த ஒரு நாள் பயிற்சி தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட மன்றத்தில் செவ்வாய்கிழமை அளிக்கப்பட்டது.
பயிற்சிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், தா. பழூர் இந்தியன் வங்கி மேலாளர் சந்திரசேகர் பங்கேற்று, ஊராட்சி செயலர்கள், பஞ்சாயத்தில் இருந்து பெறப்படும் நிதிகளை ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்து வரவு, செலவுகளைப் பராமரிப்பது, டெபிட் கார்டு மூலம் பணம் எடுப்பது குறித்து பல்வேறு கருத்துகளை வழங்கினார். பயிற்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, அல்லிராணி, இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.