தாழ்வாகச் சென்ற மின்கம்பி சீரமைப்பு

அரியலூர் ராஜீவ் நகரில் ஆபத்தான நிலையில் மின் கம்பிகள் தாழ்வாக இருந்ததினால் அந்த நகரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வந்தனர்.  

அரியலூர் ராஜீவ் நகரில் ஆபத்தான நிலையில் மின் கம்பிகள் தாழ்வாக இருந்ததினால் அந்த நகரில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் சென்று வந்தனர்.  
அவ்வழியாகச் செல்வோர் மீது மின் கம்பி உரசினால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக கடந்த திங்கள்கிழமை ஆராய்ச்சி மணியில் செய்தி வெளியிடப்பட்டது.  இதையறிந்த மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி, மின் கம்பியை  சீர் செய்து நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அலுவலகத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக அதனை சீர் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com