திருமழபாடியில் திமுக பொதுக்கூட்டம்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில்  திமுக பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட இலக்கிய அணி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருமழபாடியில்  திமுக பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட இலக்கிய அணி சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சப்பாணி தலைமை வகித்தார்.
கிழக்கு ஒன்றியச் செயலாளர் கென்னடி, மாவட்ட துணைச் செயலாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமை கழகப் பேச்சாளர்கள் நன்மாறன், ரமேஷ் ஆகியோர் வாழத்துரை வழங்கினர். 
மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்றுப் பேசினார். அப்போது, தமிழகத்தை வழிநடத்த திமுகவினால் மட்டுமே முடியும்.  கடந்த தேர்தல்களில் நம்மைவிட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம் தற்போது திமுகவுடன் கை கோர்த்துள்ளனர். மேலும், பாஜக ஆட்சியை தமிழகத்தில் புகுத்த அவர்கள் பல்வேறு பிரச்னைகளை உண்டு பண்ணுகின்றனர். ஆனால் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது.
 வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் வர இருக்கிறது. நாம் அனைவரும் அயராது பாடுபட்டு தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியை கொண்டு வந்து தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றார்.
கூட்டத்தில், இந்திய ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகி பலர் திமுக வில் இணைந்தனர். 
கூட்டத்தில், மாவட்ட மகளிரணி செயலாளர் லதா பாலு, மாவட்ட இலக்கிய அணி கருப்புசாமி, மாவட்ட இளைஞரணி முத்தையா பழனிசாமி, கழகப் பேச்சாளர் சண்முகம், ஒன்றிய இளைஞரணி முருகேசன், இலக்கியதாசன் உட்பட கழகப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக, மேற்கு ஒன்றியச் செயலாளர் அசோக சக்ரவர்த்தி வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com