எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு அரியலூர் மாவட்டத்தில் 96.13 %: 12 ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

பத்தாம் வகுப்பு தேர்வில், அரியலூர் மாவட்டத்தில் 96.13 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 2.80 சதவீதம் அதிகரித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வில், அரியலூர் மாவட்டத்தில் 96.13 சதவீதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட 2.80 சதவீதம் அதிகரித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 164 பள்ளிகளில் இருந்து 10,912 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியிருந்தனர். இவர்களில் 10,490 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.13% சதவீதத் தேர்ச்சி.
கடந்த ஆண்டை விட 2.80 சதவீதம் அதிகரித்து, மாநிலஅளவில் தேர்ச்சி வரிசையில் 12 இடத்தில் உள்ளது. கடந்தாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 24 -வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி பெற்றவர்களில், 481-க்கு மேல் 83 பேர், 451 முதல் 480 வரை 475 பேர், 46 முதல் 450 வரை 569 பேர், 401 முதல் 425 வரை 849 பேர், 301 முதல் 400 வரை 4561 பேர், 201 முதல் 300 வரை 3743 பேர், 176 முதல் 200 வரை 312 பேர், 175-க்கும் குறைவாக 300 பேர் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
88 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி:
கடந்த ஆண்டில் 27 அரசுப் பள்ளிகள் உள்பட 62 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றன. நிகழாண்டில் 41 அரசுப் பள்ளிகள், 8 அரசு உதவி பெறும் பள்ளிகள்,17 சுயநிதி பள்ளிகள், 22 மெட்ரிக். பள்ளிகள் என மொத்தம் 88 பள்ளிகள் 100 % சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com