கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழுவினர் அமைதிப் பேரணி

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அரியலூர்

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அரியலூர் மாவட்டம் திருமானூரில் கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு சார்பில் அமைதிப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய அமைதி பேரணி முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று திருமானூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.
அப்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதில், கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு, அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந் து கொண்டனர். இதேபோல் அரியலூரில் இளைஞர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com