விவசாயியிடம் நகை பறித்த 3 பேர் கைது

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே  விவசாயியிடம் 3 பவுன் சங்கிலி பறித்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே  விவசாயியிடம் 3 பவுன் சங்கிலி பறித்த 3 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை (48), விவசாயி, புதன்கிழமை இரவு இவர் உடையார்பாளையம் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இடையார் முருகன் கோயில் அருகே சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர்  தங்கதுரையை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது மளங்கன்குடியிருப்பு கிராமங்களை சேர்ந்த ரவி மகன் சூர்யா(19), சந்திரன் மகன் பாரதி(21),நல்லதம்பி மகன் வினோத்(21),உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த செஞ்சுடர்(21) ஆகிய 4 பேர் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களில் 3 பேரை வியாழக்கிழமை கைது செய்தனர். செஞ்சுடரை தேடுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com