இளைஞரை தாக்கிய இருவர் கைது

அரியலூர் மாவ ட்டம், உடையார்பாளையம் அருகே இளைஞரைத் தாக்கிய 2 பேர் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவ ட்டம், உடையார்பாளையம் அருகே இளைஞரைத் தாக்கிய 2 பேர் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் மகன் அன்பரசன் (26). புதன்கிழமை இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (57),சதீஷ் (32) ஆகிய 2 பேரும் சேர்ந்து திட்டி தாக்கினர். 
இதில் பலத்த காயமடைந்த அன்பரசன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து அன்பழகன்,சதீஷ் ஆகியோரை வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com