அரியலூர் மாவ ட்டம், உடையார்பாளையம் அருகே இளைஞரைத் தாக்கிய 2 பேர் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள இடையார் கிராமத்தைச் சேர்ந்த முருகையன் மகன் அன்பரசன் (26). புதன்கிழமை இவர் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது, அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (57),சதீஷ் (32) ஆகிய 2 பேரும் சேர்ந்து திட்டி தாக்கினர்.
இதில் பலத்த காயமடைந்த அன்பரசன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து அன்பழகன்,சதீஷ் ஆகியோரை வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.