ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், 21 மாத  ஓய்வூதிய, குடும்ப ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதிய, குடும்ப ஒய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும். மாதந்தோறும் மருத்துவப்படி ரூ.1,000 வழங்க  வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க மாவட்டத் தலைவர் இரா. முருகேசன் தலைமை வகித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com