பூப்பந்தாட்டப் போட்டி:  மாணவர்களுக்குப் பாராட்டு

19 வயதுக்குட்பட்டோர் பூப்பந்தாட்டப் போட்டியில்  வெள்ளி வென்ற அரியலூர் மாவட்ட பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.

19 வயதுக்குட்பட்டோர் பூப்பந்தாட்டப் போட்டியில்  வெள்ளி வென்ற அரியலூர் மாவட்ட பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
பள்ளி கல்வித் துறை சார்பில் செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பள்ளியில் அண்மையில் நடைபெற்ற 36 ஆவது மாநில அளவிலான போட்டியில் பங்கேற்று வென்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை நடந்த  விழாவில் பள்ளி தலைமையாசிரியை மெட்டில்டா,பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள்,உடற்கல்வி ஆசிரியர் திருமூர்த்தி மற்றும் அனைத்து பாட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர். தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் தமிழ்நாடு அணிக்காக விளையாடிய இப்பள்ளி மாணவர்கள் ராம்குமார், வசந்தகுமார் ஆகியோர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com