2 வீடுகளில் நகைகள் திருட்டு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 2 வீடுகளில் புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே 2 வீடுகளில் புகுந்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருமானூர் அருகேயுள்ள கொரத்தாக்குடி மேலத்தெருவில் வசித்து வருபவர் ஜெயா (27). இவர் வெள்ளிக்கிழம இரவு மின்சாரம் இல்லாததால், வீட்டின் கதவை சாத்தி விட்டு, வீட்டின் முன்பு குடும்பத்தினருடன் தூங்கியுள்ளார். சனிக்கிழமை அதிகாலை எழுந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பது தெரியவந்தது. 
இதேபோல், பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜயக்குமார்(29) என்பவரின் வீட்டிலிருந்த ஒன்றரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெங்கனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com