அரியலூர் மாவட்டம் செந்துறை அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சியை மாவட்டக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி தலைமையேற்று தொடக்கி வைத்தார். 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இக்கண்காட்சியில் கலந்து கொண்ட 150-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இந்தக் கண்காட்சியில் சிறுகடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுந்தரம், உஞ்சினி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராகக் கலந்து கொண்டனர்.
இந்தக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மாணவர்கள், அரியலூரில் 16 ஆம் தேதி நடைபெறும் மாவட்ட அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.