இன்று வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்

அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்த முகாம் நடைபெறுகிறது. 

அரியலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்த முகாம் நடைபெறுகிறது. 
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்த சிறப்பு முகாம்கள்  கடந்த 9.9.2018, 23.9.2018 மற்றும் 7.10.2018 ஆகிய தினங்களில் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து 587 வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்.14) 4 ஆம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் விரிவாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேற்கண்ட சிறப்பு முகாம் பணிகளை கண்காணித்திடும் பொருட்டு, துணை ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் நிலையிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 
எனவே பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com