இளைஞர் எழுச்சி நாள் திறனாய்வு போட்டிகள்

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித்  திட்ட அலகு 1, 3 சார்பில்

அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித்  திட்ட அலகு 1, 3 சார்பில் இளைஞர் எழுச்சி நாள் திறனாய்வுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்துல் கலாமின் கனவுகள், இந்திய அறிவியல் வளர்ச்சியில் கலாமின் பங்கு போன்ற தலைப்புகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி போட்டிகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியை கல்லூரி முதல்வர் பெ.பழனிச்சாமி தலைமை வகித்தார்.
போட்டிகளுக்கு தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.தமிழ்மாறன் , பெ.கலைச்செல்வன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வெ.கருணாகரன், ப.செல்வமணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com