விவசாயியைத் தாக்கிய இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே விவசாயியை தாக்கிய இளைஞர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பக்கிரி மகன் பாலுசாமி(42), மகாலிங்கம் மகன் இளையராஜா(28). இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை பாலுசாமி தனது நிலத்தில் உள்ள முட்செடிகளை வெட்டிக்கொண்டிருந்தார். 
அப்போது அங்கு வந்த இளையராஜா பாலுசாமியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் பாலுசாமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து இளையராஜாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com