அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 302 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். கூட்டத்தில் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 302 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியர், இந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சே.தனசேகரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ. பூங்கோதை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.