அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரிச் சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.16) காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மின்நுகர்வோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 94458 53675 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.