கோஷ்டி மோதல்:4 பேர் கைது

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இரு தரப்பினர் இடையே மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள வாணத்திரையான்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் மகன் முத்தையன்(38). இவரது உறவினர் செம்மையன் மகன் செல்வம் (24).இவர்கள் இருவருக்கும் நில பிரச்னையால் முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை இரு தரப்பினரும் தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொண்டனராம்.  இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து இரு தரப்பைச் சேர்ந்த முத்தையன்,செந்தாமரை,செல்வம்,மல்லிகா ஆகிய 4 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com