அரியலூரில் செப்.16-இல்  சைக்கிள் போட்டிகள்

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் செப். 16-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.

அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கில் செப். 16-ல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடைபெறுகிறது.
13 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கு 20 கி. மீ. தூரமும், 13 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 10 கி. மீ. தூரமும், 15 மற்றும் 17 வயதிற்குள்பட்ட மாணவிகளுக்கு 15 கி.மீ. தூரமும் சைக்கிள் போட்டி நடைபெறும்.போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் சாதாரண சைக்கிள்களையே  உபயோகிக்க வேண்டும். போட்டி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே வர வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.  
போட்டியில் முதல் 3 இடம் பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும்.  முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு  தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதைத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com