அரியலூர் மாவட்ட ஆட்சியரக பிரதானக் கூட்டரங்களில், மாவட்ட அளவிலான மாதாந்திர ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் செப்.28 காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 20 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பிரதிகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.