அரியலூர் மாவட்டம் , உடையார்பாளையம் அருகேயுள்ள தத்தனூர் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சீ. ரவிச்சந்திரன் (46). அரசுப் பேருந்து நடத்துநர். இவர் வெள்ளிக்கிழமை உடையார்பாளையம் நோக்கி பைக்கில் சென்றபோது எதிரே வந்த காவல் துறை கார் மோதி பலத்த காயமடைந்தார். அரியலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர்,மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அவர் சேர்க்கப்பட்டார். உடையார்பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.