பைக்கிலிருந்து விழுந்த கர்ப்பிணி சாவு

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள  சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  ராமகிருஷ்ணன்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள  சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  ராமகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா(24).  இருவருக்கும்  திருமணமாகி  ஓராண்டாகிறது.
இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியான சுகன்யாவை, ராமகிருஷ்ணன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு சுகன்யாவின் தாய் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றார். சோழங்குறிச்சி பிரிவுச் சாலையில்  சென்றபோது, நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்து இருவரும் பலத்த காயமடைந்தனர். ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்ட இருவரில் சிகிச்சை பலனின்றி சுகன்யா  உயிரிழந்தார். உடையார் பாளையம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com