அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு ஆக.31ஆம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.14) மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000, பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் மு.விஜயலட்சுமி வழங்கினார்.
தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் நிர்வாக துணை இயக்குநர் மா.சி.தியாகராசன், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.