ஏப். 27-இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

கரூரில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஏப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கரூரில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஏப். 27-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது நடவடிக்கை எடுப்பதில் காணப்படும் எரிவாயு முகவர்களின் மெத்தனப்போக்கு உள்ளிட்டவை தொடர்பாக வரப்பெறும் புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தீர்வு காணும் வகையில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27-ஆம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் தலைமையில் மாலை 3 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகளை புகார்களாக தெரிவித்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com