ஜூலை 21 முதல் 30 வரை கரூரில் புத்தக திருவிழா

வரும் ஜூலை 21 முதல் 30 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக அதன் விழா கௌரவ தலைவர் பிடி.கோச் தங்கராசு தெரிவித்தார்.

வரும் ஜூலை 21 முதல் 30 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதாக அதன் விழா கௌரவ தலைவர் பிடி.கோச் தங்கராசு தெரிவித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாரதி புத்தகாலயம் சார்பில் விழா நடத்துவது குறித்த கூட்டம் கரூரில் விழா கௌரவ தலைவர் பிடி.கோச். தங்கராசு தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைவர் தீபம் சங்கர், செயலாளர் ஜான் பாஷா, பொருளாளர் மு. சுப்ரமணியம், அமைப்பாளர் து.ர.பெரிசாமி, காமராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இலக்கியவாதி தென்னிலை இராம.கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், ஜூலை 21 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவது, மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில், 15% வரை தள்ளபடி செய்வது, சிறந்த சொற்பொழிவாளர்களை தேர்வு செய்து சிறப்புரையாற்றச் செய்வது என்பன உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com