வரும் மே 3-ம்தேதி புலியூர்  பகுதியில் மின்சாரம் நிறுத்தம்

வரும் மே 3-ம்தேதி புலியூர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.

வரும் மே 3-ம்தேதி புலியூர் பகுதியில் மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பாெறியாளர் கு.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட புலியூர் துணைமின் நிலையத்தில் வரும் 3-ம்தேதி(புதன்கிழமை)மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அன்று துணைமின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி,
எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு ஆகிய
பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com