மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகரக் காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் போட்டி பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டியில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் இரண்டாமிடம் பிடித்தார். இதற்கான பரிசை சென்னை ஆயுதப்படை காவல் துறைத் தலைவர் சி. சந்திரசேகர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் வி. வரதராஜூ, திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.