அம்பேத்கர் சிலைக்கு கட்சியினர் மாலை

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு கரூரில் அவரது சிலை மற்றும் படத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 கரூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் ஜெயராமன் தலைமையில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதி காமராஜர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த
அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  மாவட்ட செய்தித் தொடர்பாளர் இளங்கோ, பொருளாளர் சதீஷ், நகரச் செயலர் பாலசிங்கம், மாவட்ட அமைப்பாளர் கெஜா மற்றும்
மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட இந்தியக் குடியசுக் கட்சி சார்பில் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் தலித் கே. ஆனந்தராஜ் தலைமை வகித்து அம்பேத்கர் படத்துக்கு
மாலை அணிவித்தார்.  மாவட்டச் செயலர் பி. தனபாலன், மகளிர் அணிச் செயலர் வெ. கலா, க.பரமத்தி ஒன்றியச் செயலர் தே. வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட பாஜக சார்பில் மனோகரா கார்னர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். 
மாவட்ட பொதுச் செயலர்கள் நகுலன், மோகன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com