கரூரில் இந்து முன்னணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அயோத்தியில் ராமபிரானுக்கு கோயில் அமைக்கக் கோரியும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்தக்கோரியும் இந்து முன்னணி சார்பில் கரூரில் காவிக்கொடி ஆர்ப்பாட்டம்
பேருந்துநிலைய ரவுண்டா அருகே ஆர்எம்எஸ் அலுவலகம் முன் புதன்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவர் ஜெயம்கணேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஷ், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் வி.சி. கனகராஜ், செயலர்கள்
ராமகிருஷ்ணன், ராஜலிங்கம், பேச்சாளர் திருநாவுக்கரசு, பாஜக மாவட்டத் தலைவர் முருகானந்தம், பொதுச் செயலர்கள் நகுலன், மோகன், நகரத் தலைவர் ஆர். செல்வன் உள்ளிட்டோர்
சிறப்புரையாற்றினர்.
இதில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட மக்களவையில் சட்டம் இயற்றக்கோரி கோஷங்களை எழுப்பினர். இந்து முன்னணியினர், பாஜகவினர் திரளாக பங்கேற்றனர்.