கரூரில் மாவட்ட ஆட்சியரக பெண் ஊழியரிடம் தகராறு செய்தவர் மீது போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.
கரூர் மேற்குபிரதட்சணம் சாலை பகுதியைச் சேர்ந்த கணேசன் மகள் மாவட்ட ஆட்சியரகத்தில் தட்டச்சராக உள்ளார். இவரிடம் நட்புடன் பழகிவந்த திருமாநிலையூரைச் சேர்ந்த கவியரசுவின்
நடவடிக்கை பிடிக்காமல் அவரிடம் பேசுவதை அப்பெண் தவிர்த்தாராம். இந்நிலையில் கடந்த மாதம் 16-ம் தேதி கரூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த தன்னிடம் தகராறு செய்து கவியரசு தாக்கியதாக
கரூர் நகர காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அப்பெண் அளித்த புகாரின்பேரில் கவியரசு மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.