தமிழ்நாடு அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் அரவக்குறிச்சி குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலகம் முன், 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பழைய ஊதிய முறையை நடமுறைப்படுத்துதல், இளநிலை உதவியாளருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும், சனிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதேபோல் க.பரமத்தியிலும் அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.