இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் வியாழக்கிழமை காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
கரூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் மாவட்ட இளைஞரணித் தலைவர் என்.எஸ்.பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க். கே.சுப்ரமணியன் பங்கேற்று, புதிய நிர்வாகிகளை வாழ்த்திப் பேசினார்.
முன்னதாக கரூர் பேருந்து நிலைய மனோகரா கார்னரில் உள்ள காமராஜர் சிலைக்கு புதிய நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொம்முராஜ், கரூர் சட்டமன்ற இளைஞர்
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.சிவகுமார், மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், பொதுச் செயலாளர்கள் புலவர் நாகராஜன், சுரேகா பாலச்சந்தர், கரூர் நகரத்தலைவர் ஆர்.ஸ்டீபன்பாபு, கரூர் வட்டாரத் தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.