தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் கரூரில் அண்மையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.கண்ணதாசன் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் சி.விஜயகுமார் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் செந்தில்குமார், முருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், சாலைப் பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்ய கரூர் கோட்டப் பொறியாளர் முதன்மை இயக்குநருக்கு பரிந்துரைக்க வேண்டும், நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரகப்பணித் துறை சிக்கன நாணய சங்கத்தில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும், உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய ஈவுத்தொகையை உடனே வழங்க வேண்டும், கரூர் கோட்டத்தில் பணியாற்றும் சாலைப்பணியாளர்கள்
அனைவருக்கும் கருவி, தளவாடங்கள் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.