வரும் ஜனவரி 10-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உரிய படிவங்களில் விண்ணப்பிக்க வரும் 15-ஆம்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு சரிபார்ப்புப் பணிகள் வரும் 15-ம்தேதி வரை நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்படுவதாக இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 10-ஆம்தேதி அன்று வெளியிடப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.