சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சி ஜூவா தொழிற்சங்கம் சார்பாக நியாய விலைக் க டைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஜூவா தொழிற்சங்கத்தினர்

அரவக்குறிச்சி ஜூவா தொழிற்சங்கம் சார்பாக நியாய விலைக் க டைகளில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ஜூவா தொழிற்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் ந டத்தினர்.
மாவட்டச் செயலர் பெரியசாமி தலைமை வகித்தார். இதில்  நியாய விலைக் கடைகளில் சர்க்கரை விலையை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஜம்ஜம் நகரில் தெருவிளக்கைச் சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணைச் செயலர் சேஷன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தொழிற் சங்க மாவட்டத் தலைவர் குமார் உள்பட 26-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com