பள்ளபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குடும்ப அட்டை சிறப்பு முகாமில் 171 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
வருவாய் அலுவலகத்தில் நடைபெற்ற குடும்ப அட்டை சிறப்பு முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கல்,சேர்த்தல்,புதிய அட்டை விண்ணப்பித்தல் உள்ளிட்டவை குறித்து 171 மனுக்கள் பெறப்பட்டன.
அதன் மீது உடனடி தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூரிய பிரகாஷ் வழங்கினார். மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், பறக்கும் ப டை வட்டாட்சியர் ரஞ்சித்,வட்டாட்சியர் சந்திரசேகர், சமூகப் பாதுகாப்புத் தனி வட்டாச்சியர் மூர்த்தி,வருவாய் ஆய்வாளர் ரவிவர்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.