கரூர் ஆயுதப்படையை மத்திய மண்டல காவல் துறைத் தலைவர் வி. வரதராஜு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
முன்னதாக போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர் தொடர்ந்து ஆயுதப்படை காவல் ஆய்வாளர்கள், உடை, பொருட்களை ஆய்வு செய்தார். பின்னர் காவல் துறை வாகனங்கள், வாகனப்பிரிவு, துப்பறியும் நாய்படைப் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கேபிஎஸ். ஜெயச்சந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் கும்மராஜா, முத்துக்கருப்பன், முத்தமிழ்செல்வன், சிற்றரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.