கரூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஜூலை 17) முதல் 15 நாட்களுக்கு (ஜூலை 31 முடிய) காசநோய் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் நடைபெறும் இம்முகாமில் காசநோய் அறிகுறி உள்ள பொதுமக்கள் மற்றும் காசநோய் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களுக்கு இலவசமாக பரிசோதிக்க அனைத்து கிராம, நகர, பேரூராட்சிப் பகுதிகள் உள்பட அனைத்து பகுதிகளிலும் வீடுவீடாகச் சென்று காசநோய் இலவசப் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி காசநோயற்ற சமுதாயத்தை உருவாக்கிட அனைவரும் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.