முறைகேட்டில் ஈடுபட்ட மூலிமங்கலம் ரேஷன் கடை விற்பனையாளர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டம், புகழூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மூலிமங்கலம் ரேஷன் கடையில் மாதத்தின் முதல் இரு வெள்ளிக்கிழமை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கடையைத் திறந்து கடையின் விற்பனையாளர் சந்திரன் ரூ.2,952-க்கு பொருட்களை விற்பனை செய்துள்ளார். விடுமுறை நாளில் கடையைத் திறந்து வியாபாரம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால் விற்பனையாளர் சந்திரன் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்படுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.