கரூரில் இன்று அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவுநாள் அமைதி பேரணியை கல்வி நிறுவனங்களுடன் தினமணி நாளிதழ் இணைந்து வியாழக்கிழமை 2 இடங்களில் நடத்துகிறது.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவுநாள் அமைதி பேரணியை கல்வி நிறுவனங்களுடன் தினமணி நாளிதழ் இணைந்து வியாழக்கிழமை 2 இடங்களில் நடத்துகிறது.
கரூர் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் தினமணி இணைந்து நடத்தும் இந்தப் பேரணி கரூர் வெண்ணைமலையில் காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. பேரணியை கரூர் நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் கும்மராஜா தொடக்கி வைக்கிறார்.
அதேபோல, கரூர் வெற்றி விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியுடன் தினமணி இணைந்து நடத்தும் அப்துல்கலாம் நினைவு நாள் பேரணி காலை 10 மணிக்கு வாங்கல் காவல் நிலையம் அருகே தொடங்குகிறது. பேரணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் தொடக்கி வைக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com