தொடக்கக் கல்வி பட்டயம்: மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2017-18-ம் கல்வியாண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்புக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் 31-ம்தேதி w‌w‌w.‌t‌n‌s​c‌e‌r‌t.‌o‌r‌g  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 2017-ம் ஆண்டிற்கான பிளஸ்-2 தேர்வு உடனடித் தேர்வு முடிவுகள் அரசு தேர்வுத் துறையால் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், தொடக்கக் கல்வி பட்டப்படிப்பு ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவுசெய்ய வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள் இதைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com