மாயனூர் அருகே பாம்பு கடித்ததில் 4-ம் வகுப்பு சிறுவன் உயிரிழந்தான்.
மாயனூரை அடுத்துள்ள தாராபுரத்தனூரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் தெய்வபிரகாஷ் (9). இவன் அங்குள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.
இதில் மயங்கிய அவனை பெற்றோர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். எனினும், வழியிலேயே அவன் இறந்தான். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.