மாயனூர் அருகே பாம்பு கடித்து சிறுவன் சாவு

மாயனூர் அருகே பாம்பு கடித்ததில் 4-ம் வகுப்பு சிறுவன் உயிரிழந்தான்.

மாயனூர் அருகே பாம்பு கடித்ததில் 4-ம் வகுப்பு சிறுவன் உயிரிழந்தான்.
மாயனூரை அடுத்துள்ள தாராபுரத்தனூரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் தெய்வபிரகாஷ் (9). இவன் அங்குள்ள அரசுப் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.
இதில் மயங்கிய அவனை பெற்றோர் சிகிச்சைக்காக  கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். எனினும், வழியிலேயே அவன் இறந்தான். இதுகுறித்து மாயனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com