நிகழாண்டுக்கான பத்ம விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

நிகழாண்டுக்கான பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டுக்கான பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கலை,அறிவியல்,இலக்கியம்,விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2017 ஆம் ஆண்டுக்கான பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகிய வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. இவ்விருதுகள் பெறுவது தொடர்பான விவரங்கள் ​ w‌w‌w.‌pa‌d‌m​a​a‌w​a‌r‌d‌s.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வரும் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்  நலன் அலுவலர், கரூர்  மாவட்டம் என்ற முகவரிக்கு தகுதியுள்ளவர்கள் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் ஆட்சியரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com