அரவக்குறிச்சி அருகே குடிநீர் கோரி ஆர்ப்பாட்டம்

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேலம்பாடி மற்றும் பொன்நகருக்கு குடிநீர் வழங்காத வேலாம்பாடி ஊராட்சியைக் கண்டித்து

அரவக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட வேலம்பாடி மற்றும் பொன்நகருக்கு குடிநீர் வழங்காத வேலாம்பாடி ஊராட்சியைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை காலை ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இப்பகுதியில் கடந்த பல நாட்களாக தண்ணீர் வழங்கப்படவில்லை. தண்ணீர் வழங்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. இதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் பாலகிருஷ்ணன் தலைமையில் 50 பேர் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் துணைச் செயலர் சேஷன், சி.ஐ.டி.யு.சி அனைத்து மோட்டார் வாகன மாவட்ட சங்கத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com