காவல் ஆய்வாளரை மிரட்டிய இளைஞர் கைது

கரூரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரை மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

கரூரில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளரை மிரட்டிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் நகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மாரிமுத்து கடந்த 26-ம் தேதி கரூர் ஜவஹர் பஜார் கடைவீதியில் 2 போலீஸாருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்த முருகன் (22) என்பவரை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளார். அவர் ஆவணங்களை காட்ட மறுத்ததுடன், ஆபாச திட்டி போக்குவரத்துக் காவல் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து கரூர் நகரக் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், முருகனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com