கரூர் ராயனூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (51). இவர், திருப்பூரில்
ஜவுளித்தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். சனிக்கிழமை திருப்பூரில் இருந்து கரூர் வந்த அவர், கரூர் பேருந்துநிலையத்தில் இருந்து ராயனூர் செல்லும் பேருந்தில் ஏறி, நிறுத்தத்தில் இறங்கி வீட்டுக்குச் செல்லும் போது, போதையில் தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.