பெரியார் நகருக்கு மயான வசதி ஏற்படுத்தித் தரக் கோரிக்கை

க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகருக்கு மயான வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நலத் துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

க.பரமத்தி ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகருக்கு மயான வசதி ஏற்படுத்தித்தர மாவட்ட தாழ்த்தப்பட்டோர் நலத் துறையினர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 100-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. தற்போது 75-க்கும் மேற்பட்டோருக்கு அரசு தொகுப்பு வீடாகக் கட்டியும், சிலர் சொந்த செலவிலும் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.
இப்பகுதியில் மயான வசதி இல்லை. கடந்த 15 ஆண்டு காலமாக அங்கு வசிப்போர் தங்களது சொந்த ஊருக்குக் கொண்டு சென்று நல்லடக்கம் செய்யும்போது பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே க.பரமத்தி பெரியார் நகருக்கு மாயான வசதி யை ஏற்படுத்தி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com