கரூர் மாவட்டத்தில் மண்மங்கலம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய வட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 19) அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருவாய்த் துறை சார்பில் அம்மா திட்ட முகாம் மண்மங்கலம், அரவக்குறிச்சி, குளித்தலை ஆகிய வட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 19) நடைபெற உள்ளது. மண்மங்கலம் வட்டத்தில் கிழக்கு தவுட்டுப்பாளையம் சமுதாயக்கூடம், அரவக்குறிச்சி வட்டத்தில் புன்னம்சத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குளித்தலை வட்டத்தில் கீழவெளியூர் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த வட்டாட்சியர்கள் தலைமையில் முகாம் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.