க.பரமத்தி அருகே  டாஸ்மாக் கடை சூறை

க.பரமத்தி அருகே குப்பம் ஊராட்சிக்குட்பட்ட செட்டித்தோட்டம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை வியாழக்கிழமை

க.பரமத்தி அருகே குப்பம் ஊராட்சிக்குட்பட்ட செட்டித்தோட்டம் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடையை வியாழக்கிழமை அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள்,ஆண்கள் சூறையாடினர். இதில்,50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை உடைத்தனர்.
நொய்யலில் இயங்கி வந்த டாஸ்மாக் மதுக்கடை வியாழக்கிழமை குப்பம் ஊராட்சிக்குட்பட்ட குந்தாணிபாளையம் - காங்கயம்பாளையம் சாலையில் செட்டித்தோட்டம் பகுதியில் தொடங்கினர்.
இதையடுத்து, சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் ஒன்றுசேர்ந்து கடையை சூறையாடினர். தகவலறிந்த அரவக்குறிச்சி வட்டாச்சியர் சந்திரசேகரன், துணை வட்டாட்சியர் செந்தில், வருவாய் ஆய்வாளர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். முன்னதாக க.பரமத்தி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com