குளித்தலையில் பைக்கில் இருந்து  விழுந்தவர் சாவு

குளித்தலையில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.

குளித்தலையில் பைக்கில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம், தென்னூர் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணன் (34). இவர், புதன்கிழமை தனது பைக்கில் திருச்சி வந்துவிட்டு பின்னர் திருப்பூருக்கு திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை கடம்பர் கோயில் அருகே சென்றபோது, திடீரென பைக் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com