சின்னதாராபுரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவில் மூலிகைப் பண்ணையில் மூலிகைச் செடிகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் சி.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 50 வகையான மூலிகைச் செடிகள் நடப்பட்டன.
ஓய்வு பெற்ற சித்த மருத்துவ அலுவலர் ராணி, மருத்துவ அலுவலர்கள் பிருந்தா, ஜெயப்பிரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மருத்துவர் சித்த மருத்துவ அலுவலர் மருத்துவர் கவிதா செய்திருந்தார்.